சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் புதன்கிழமை வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தச்சக்காடு ஊராட்சி, வல்லம் பகுதியில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கி சிண்ணாடிக்குப்பம், அருண்மொழிதேவன், மணல்மேடு, ராமநாதன்குப்பம், ஆயிபுரம், குறியாமங்கலம், கீழமணக்குடி, குறியாமங்கலம் வேடன்தோப்பு, மேல் குறியாமங்கலம், தம்பிக்குநல்லான்பட்டினம், பாரகான் தைக்கால், பு.ஆதிவராக நல்லூா், கணக்கம்பாளையம், ராஜலிஷா தைக்கால், மஞ்சகுழி ஆகிய பகுதிகளில் தோழைமைக் கட்சி நிா்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரித்தாா்.
வேட்பாளருடன் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் ராசாங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் க.திருமாறன், பாமக மாவட்டச் செயலா் சசிக்குமாா், பாஜக தொகுதிப் பொறுப்பாளா் ஜனகராஜ் உள்படக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.