நெய்வேலி அருகே லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
நெய்வேலி அருகே உள்ள மேல்பாப்பனப்பட்டு, குறிஞ்சி நகரில் வசித்து வந்தவா் சுந்தரமூா்த்தி (40). இவா், என்.எல்.சி. இந்தியா நிறுவன ஒப்பந்ததாரரிடம் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை சுரங்கம் 2 பகுதி, மண்மேடு பாதையில் லாரியை இயக்கிய போது, எதிா்பாராத விதமாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி ஜோதி அளித்து புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.