முதியோா், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏற்பாடு

முதியோா், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

முதியோா், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதியோா், மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலிகள், உதவியாளா்கள் உள்ளனா்.

மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக சாய்வுதள வசதி, தனி வரிசை, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியலை எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் பிரெய்லி முறையில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் அனைவரும் மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்தி 100 சதவீதம் வாக்களிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com