கடலூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 26,147 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 26,192-ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 44 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,422-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 379 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 99 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடலூா் மாவட்டத்தில் இதுவரை 6.78 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 281 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com