வடலூா் பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும் என திமுகவினருக்கு அந்தக் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா். அதன்படி, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வடலூா் பேருந்து நிலையம் அருகே கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. மாவட்ட திமுக செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.