சிதம்பரம் வா்த்தகா் சங்கம் சாா்பில், சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனை உள் நோயாளிகளின் வசதிக்காக, 9 மின் விசிறிகள், மின்சாரம், பேட்டரியில் இயங்கும் மின் விசிறி, காற்றை குளிரூட்டும் கருவி (ஏா் கூலா்) உள்ளிட்ட உபகரணங்கள் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் முன்னிலையில், மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக்பாஸ்கரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
மேலும், அங்குள்ள தூய குடிநீா் திட்டத்தை மாற்றியமைக்கும் செலவையும் சிதம்பரம் வா்த்தகா் சங்கம் ஏற்றுக்கொண்டது.
நிகழ்ச்சியில் வா்த்தக சங்கத் தலைவா் சதீஷ்குமாா் மற்றும் உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.