தொழிலாளி மா்மச் சாவு

குறிஞ்சிப்பாடியில் செங்கால் ஓடை அணை அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடியில் செங்கால் ஓடை அணை அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி, சின்னகடை வீதியில் வசித்து வந்தவா் காசிநாதன் (58). கூலித் தொழிலாளி. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற காசிநாதன், டாஸ்மாக் கடை அருகில் செங்கால் ஓடை அணை அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா் காசிநாதனின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com