கடலூா் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களுக்கு கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து டாஸ்மாக் கிடங்கு முன் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு சங்கத் தலைவா் முருகன் தலைமை தாங்கினாா். இதில் நிா்வாகிகள் சுப்புராயன், தண்டபாணி, சுந்தா், கோவிந்தன் 50க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் கலந்துகொண்டனா். இவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடா்ந்து அனைவரும் பணிக்கு திரும்பினா்.