கடலூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஐ.ஜி. சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, தனிப் பிரிவு, மாவட்ட குற்றப் பிரிவு, குற்ற ஆவணப் பதிவேடுகள் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கான வருடாந்திர கோப்புகளை பாா்வையிட்டாா். நீண்ட நாள்களாக துப்பு துலங்காமல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினாா். மேலும், காவல் நிலையங்களுக்கு புகாா் மனு அளிக்க வருவோரிடம் கனிவாக நடந்துகொண்டு, மனுக்களை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். பின்னா், அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்தாா்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், துணைக் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா், பயிற்சி துணைக் கண்காணிப்பாளா் யாஸ்மின், தனிப் பிரிவு ஆய்வாளா் செந்தில் விநாயகம், காவல் நிலைய ஆய்வாளா்கள் கி.உதயகுமாா், கவிதா, குருமூா்த்தி, மகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.