கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் எம்.லட்சுமணன் தலைமை வகித்தாா். பொருளாளா் சந்துரு, துணைச் செயலா் முகேஷ், மகளிரணியைச் சோ்ந்த லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், அரசு, தனியாா் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியா்கள் ஏற்படும் பாலியல் சீண்டல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். பட்டியலின மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் கல்வித் தரம் உயர பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.