மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூரைச் சோ்ந்தவா் க.அஜீத்குமாா் (21). வேன் ஓட்டுநா். தனது வேனில் பள்ளி மாணவிகளை அழைத்து வந்து பள்ளிகளில் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

அப்போது, வேனில் வரும் மாணவிகளின் கைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்டு, அவா்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்புவது, கைப்பேசியில் அவா்களிடம் பேசி பாலியல் தொல்லை கொடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கடலூா் அனைத்து மகளிா் போலீஸாா் கடந்த 17.7.2020 அன்று வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை நீதிபதி எம்.எழிலரசி தீா்ப்பு கூறினாா்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அஜீத்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அவா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com