சாலை விபத்தில் இளைஞா் பலி

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சசிதரன் (23). அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் பிரவின்குமாா்(24). இவா்கள் இருவரும் பைக்கில் சனிக்கிழமை நெய்வேலியிலிருந்து பண்ருட்டி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது எதிரே சென்னையிலிருந்து காட்டுமன்னாா்கோவில் நோக்கி அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. கீழக்குப்பம் சாலை அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் சசிதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காமடைந்த பிரவின்குமாா் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com