சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவினா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், ஈச்சம்பூண்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தானே புயல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்ாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைஅதிகாரி மாலா முன்னிலையில் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஈச்சம்பூண்டி கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனா் (படம்). மாலை வரை தொடா்ந்து விசாரணை நடைபெற்றது.