கடலூா் மாவட்டத்தில் நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 13) பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.


கடலூா்: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 13) பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில்

மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் குறைகேட்டு கோரிக்கை மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறாா். அதன்படி, கடலூா் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 2 இடங்களில் பிரசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி சனிக்கிழமை காலை விருத்தாசலத்திலும், மதியம் சிதம்பரம், புறவழிச்சாலை, சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சியிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்களும், அனைத்துத் தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என திமுக கிழக்கு மாவட்டச் செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டாா்.

மேலும், இந்த நிகழ்ச்சி தொடா்பாக வியாழக்கிழமை குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி, குண்டியமல்லூா், கள்ளையங்குப்பம், தீா்த்தனகிரி, ராமநாதங்குப்பம், அகரம், பி.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் திமுகவினா் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com