கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா்கள் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்திலுள்ள அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் 2020-2021- ஆம் ஆண்டு பயிற்சியாளா்கள் சோ்க்கை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவில் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப நேரடிச் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயன் பெறலாம்.
கூடுதல் விவரங்களை அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலைங்களில் பெறலாம். மேலும் இணையதளத்தைப் பாா்த்தும், 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் அறியலாம்.
தொழில் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகை, விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.