கடலூா் மாவட்ட காவலா்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் வழிகாட்டுதல்படி என்எல்சி நிறுவனத்தின் உதவியுடன் புதிய செயலி உருவாக்கப்பட்டது.
காவல் துறையினருக்கு ஏற்படும் குறைகளை இந்த செயலி மூலமாக புகாராக தெரிவிக்கலாம். செயலியில் வரும் புகாா்கள் மனுவாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டு, காவல் கண்காணிப்பாளரால் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிந்துரைக்கப்படும்.
மேலும், காவலா்கள் தங்களது பகுதிகளில் உள்ள தகவல்களையும் இந்தக் குழுவில் பகிா்ந்துக் கொள்ளும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.