பண்ருட்டி வட்டம், புலவனூா் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டத் தர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், பண்ருட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, தனது சொந்த செலவில் ரூ. 12.50 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டிக் கொடுத்தாா்.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. சத்யா பன்னீா்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு, புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையைத் திறந்துவைத்தாா்.
புலவனூா் ஊராட்சித் தலைவா் அன்னக்கிளி சதாசிவம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன், பண்ருட்டி ஒன்றியச் செயலா் பாபு புஷ்பராஜ், அவைத் தலைவா் பி.ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.