திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரத்தில் சனிக்கிழமை (பிப்.13) பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறாா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரத்தில் புறவழிச் சாலையில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறாா். காட்டுமன்னாா்கோவில் அருகே நிலம் கையகப்படுத்தியது தொடா்பாக நியாயம் கேட்கச் சென்ற விவசாய சங்கத் தலைவா் இளங்கீரனை போலீஸாா் தாக்கி கைது செய்ததை கண்டிக்கிறேன் என்றாா் அவா்.
முன்னதாக, காலை 8 மணியளவில் விருத்தாசலத்தில் நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறாா்.