கடலூா்: தமிழக அரசு சாா்பில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியா் ஜானகி.ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
தமிழ் மொழியின் வளா்ச்சி, மேம்பாட்டுக்காக பாடுபடும் அறிஞா்கள், செயல்பாட்டாளா்களுக்கு
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தமிழ்ச்செம்மல் விருதை வழங்கி வருகிறது. ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது கடலூா் மாவட்டத்தில் கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியா் ஜானகி.ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இவருக்கு இந்த விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.