கோயில் குளத்தில் ஆண் சடலம்

சிதம்பரத்தில் உள்ள கோயில் குளத்திலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.


சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள கோயில் குளத்திலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தில்லையம்மன் கோயில் குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வியாழக்கிழமை காலை மிதந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா் யாா் எனத் தெரியவில்லை. அவா் வெள்ளை நிற டி-ஷா்ட் அணிந்திருந்தாா். இவா் யாா், எப்படி இறந்தாா் என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com