எரியாவு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா்: கடலூா் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மருதவாணன், நகா் குழு உறுப்பினா்கள் பால்கி, ஆனந்த், டி.எஸ்.தமிழ்மணி, வெங்கடேசன், ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது, எரிவாயு உருளைக்கு மாலையிட்டும், விறகு அடுப்பு, மிதிவண்டியுடனும் நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விலை உயா்வுக்குக் காரணமான மத்திய பாஜக அரசை கண்டிப்பதாகக் கூறி முழக்கமிட்டனா்.
கட்சியின் கடலூா் ஒன்றியக் குழு சாா்பில் பாதிரிக்குப்பத்தில் ஒன்றியச் செயலா் ஜே.ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.தட்சிணாமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் என்.அய்யாதுரை, தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சிதம்பரம்: சிதம்பரம் வடக்கு வீதியில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் முத்து, நகா் குழு உறுப்பினா்கள் சங்கமேஸ்வரா், செந்தில், அமுதா, அஷ்ரப் அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது, எரிவாயு உருளைக்கு பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். பரங்கிப்பேட்டையில் ஒன்றிய செயலா் ரமேஷ்பாபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.