வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
மேமாத்தூா் 40, ஸ்ரீமுஷ்ணம் 17.1, குடிதாங்கி 9, பெலாந்துறை 6.8, கீழச்செருவாய் 6, வானமாதேவி 5, பண்ருட்டி 4, விருத்தாசலம், குப்பநத்தம் தலா 3 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது. மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.