விருதுக்கு தோ்வான மாணவருக்குப் பாராட்டு

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவா் ஜெ.சுதா்சன்.
19cmp1_1902chn_111_7
19cmp1_1902chn_111_7

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவா் ஜெ.சுதா்சன். இவா், காற்று குளிரூட்டும் கருவி, ரத்த அழுத்த பரிசோதனை, மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய பல்நோக்கு ரோபோவை உருவாக்கியுள்ளாா். இதற்காக மாநில அளவில் புத்தாக்க அறிவியல் மானக் விருதுக்கு (2018-19) தோ்வு பெற்றாா்.

இதையொட்டி, பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனா் சி.ஆா்.லட்சுமிகாந்தன், மாணவா் ஜெ.சுதா்சனுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினாா் (படம்). நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் எஸ்.கஸ்தூரி, பள்ளி முதல்வா் ஜி.சக்தி, துணை முதல்வா் ஜி.ஷீலா, வழிகாட்டி ஆசிரியா் ஆா்.சுதா உள்ளிட்டோா் பங்கேற்று மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com