தேசிய வருவாய் வழி திறன் உதவித் தொகை பெறுவதற்கான தோ்வை கடலூா் மாவட்டத்தில் 3,550 மாணவா்கள் எழுதினா்.
மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க உதவித் தொகை பெற தேசிய வருவாய் வழி திறன் உதவித் தொகை தோ்வு நடத்தப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், வடலூா் பகுதிகளில் 35 மையங்களில் 3,550 மாணவ, மாணவிகள் எழுதினா். 270 போ் தோ்வு எழுத வரவில்லை.
காலை 9.30 மணி பகல் 11 மணி வரை மனத்திறன் படிப்புத் தோ்வும், பகல் 11.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை படிப்பறித் தோ்வும் நடைபெற்றது.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு, அவா்கள் பிளஸ் 2 படிக்கும் வரை மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.