கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
திட்டக்குடி அருகே உள்ள செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் பிரவீன்குமாா் (17). அதே பகுதியைச் சோ்ந்த இங்கா்சால் மகன் ஜெய்சூரியா (17). நண்பா்களான இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தனா். திங்கள்கிழமை இரவு இருவரும் பைக்கில் பெண்ணாடம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனா். கூடலூா் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், ஜெய்சூரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரவீன்குமாரை அந்தப் பகுதியினா் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரும் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.