கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது.
வியாழக்கிழமை அதிகாலையில் பரவலாகவும் இரவில் சில இடங்களிலும் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில்
பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஸ்ரீமுஷ்ணம் 38.1, பெலாந்துறை 36.8, தொழுதூா் 36, லக்கூா் 34.4, கீழச்செருவாய் 30, சேத்தியாத்தோப்பு 23.4, மேமாத்தூா் 20, சிதம்பரம் 15.2, புவனகிரி 14, விருத்தாசலம் 11.2, கொத்தவாச்சேரி 5, குப்பநத்தம் 2.