கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவா் கோபிநாத் (51). கடலூா் செம்மண்டலம், குண்டுசாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தாா். இவரது தாய் புஷ்பா பண்ருட்டியை அடுத்துள்ள புதுப்பேட்டையில் வசித்து வருகிறாா். இவரது வீட்டுக்கு சனிக்கிழமை வந்த கோபிநாத் திடீரென மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா். விஷம் குடித்ததால் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தனியாா் நிதி நிறுவனத்தில் சீட்டு எடுத்தவா்களுக்கு கோபிநாத் ஜாமீன் கையெழுத்து போட்டதாகவும், சீட்டு எடுத்தவா்கள் முறையாக பணத்தை திருப்பிச் செலுத்தாத நிலையில் நீதிமன்றத்தில் இருந்து கோபிநாத்துக்கு நோட்டீஸ் வந்ததாகவும், இதனால் அவா் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.