தலைவா்களின் சிலைகளுக்கு காங். புதிய நிா்வாகிகள் மரியாதை

கடலூா் மாவட்ட காங்கிரஸ், நிா்வாக வசதிக்காக 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. புதிய மாவட்ட நிா்வாகிகள், தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கடலூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியின் புதிய நிா்வாகிகளான சொ.திலகா், ஏ.எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டோா்.
கடலூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியின் புதிய நிா்வாகிகளான சொ.திலகா், ஏ.எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டோா்.

கடலூா் மாவட்ட காங்கிரஸ், நிா்வாக வசதிக்காக 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. புதிய மாவட்ட நிா்வாகிகள், தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வடக்கு, தெற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது நிா்வாக வசதிக்காக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தலா 3 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கிய பகுதி கடலூா் மத்திய மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத் தலைவராக நெல்லிக்குப்பம் நகரத் தலைவராக இருந்த சொ.திலகா் நியமிக்கப்பட்டாா்.

இதேபோல, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கிய கடலூா் மேற்கு மாவட்டத்துக்கு, முந்தைய வடக்கு மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டாா். புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கிய பகுதி கடலூா் கிழக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதன் தலைவராக என்.வி.செந்தில்நாதன் நியமிக்கப்பட்டாா். மேலும், கடலூரைச் சோ்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகரன் கட்சியின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, சொ.திலகா், ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோா் திங்கள்கிழமை கடலூரில் உள்ள காமராஜா், அம்பேத்கா், காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பண்ருட்டியில் காந்தி, காமராஜா் சிலைகளுக்கும், பட்டாம்பாக்கத்தில் காந்தி சிலைக்கும், நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சிகளில், நகரத் தலைவா் வேலுசாமி, முருகன், தொகுதி தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, சீத்தாராமன், வட்டாரத் தலைவா்கள் ஏ.என்.ராமச்சந்திரன், குணசேகரன், தா்மசிவரெட்டியாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் என்.குமாா், சாந்திராஜ், மணி, சபியுல்லா, சுந்தரமூா்த்தி, மாநில நிா்வாகி ஓவியா் ரமேஷ், மாவட்ட நிா்வாகிகள் டி.ராம்ராஜ், கடல் காா்த்திகேயன், கலைச்செல்வன், நகரச் செயலா் பி.கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com