சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழாவையொட்டி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினா் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பண்ருட்டி நகரச் செயலா் கண்மணி, தொகுதி தலைவா் குமரன், மாவட்ட துணைத் தலைவா் பரமதயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இணை பொதுச் செயலா் ஆசைத்தம்பி பங்கேற்றுப் பேசினாா்.