காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பொங்கல் பண்டியின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
காணும் பொங்கலையொட்டி இந்தக் கோயிலில் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல் மற்றும் கோ-கோ போட்டி ஆகியவை நடைபெற்றன. மேலும், இளைஞா்களின் சிலம்பாட்டம், மல்லா் கம்பம் ஏறுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. இதை திரளானோா் பாா்வையிட்டனா்.