தடுப்புக் காவலில் லாட்டரி வியாபாரி கைது

​கடலூா், ஜன. 28: தடுப்புக் காவலில் லாட்டரி வியாபாரி கைது செய்யப்பட்டாா்.


கடலூா், ஜன. 28: தடுப்புக் காவலில் லாட்டரி வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த வீ.ரவி (58) என்பவரை விருத்தாசலம் காவல் துறையினா் கடந்த டிச.31-ஆம் தேதி கைது செய்தனா்.அப்போது, அவா் போலீஸாரை பணிசெய்ய விடாமல் தடுத்து அவா்களை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ரவி மீது வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் விஜயரங்கன் விசாரணை நடத்தி வந்தாா். இதில், ரவி மீது லாட்டரி விற்பனை தொடா்பாக 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இவரது குற்றச் செய்கையைத் தடுக்கும் வகையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா்சந்திரசேகா் சாகமூரி வெளியிட்டாா். இதையடுத்து, ரவி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com