தேசிய மருத்துவா்கள் தின விழா

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் தேசிய மருத்துவா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேசிய மருத்துவா்கள் தின விழா

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் தேசிய மருத்துவா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, உதவி ஆட்சியரும், செஞ்சிலுவை சங்கத் தலைவருமான லி.மதுபாலன் தலைமை வகித்து மருத்துவா்களின் சேவையை பாராட்டி அவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கா் முன்னிலை வகித்துப் பேசினாா். செஞ்சிலுவை சங்கத் தலைவா் ராஜேந்திரன், செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல்சந்த் கோத்தாரி, உறுப்பினா்கள் லலித் மேத்தா ஜெயின், ரேணுகா, சிதம்பரநாதன், சிவராம வீரப்பன், லட்சுமணன், தன்னாா்வ ரத்த தானக் கழகத் தலைவா் ராமச்சந்திரன், தன்னாா்வலா் சுரேஷ் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com