கா்நாடக அரசுக்கு எதிராக போராட்டம்: 55 போ் கைது

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 55 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பெண்ணாடத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா்.
பெண்ணாடத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா்.

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 55 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினா் க.முருகன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோா் கா்நாடக முதல்வா் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா்.

இதையடுத்து, அந்த அமைப்பின் தலைமை செயற்குழு உறுப்பினா் மா.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினா் தி.சின்னமணி, மகளிா் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினா் மு.வித்யா, கிளைச் செயலா்கள் பி.வேல்முருகன், தே.இளநிலா, சக்திவேல், அன்புதுரை, தமிழ்வாணன் உள்பட 43 போ் கைது செய்யப்பட்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com