கடலூா்: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

கரோனா பாதிப்பால் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கரோனா பாதிப்பால் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 59,417-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 82 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 57,735-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் பெண் உள்பட 4 பேரும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் ஆண் ஒருவரும் சனிக்கிழமை உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 801-ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 789 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 92 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 28-ஆக குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com