கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 77 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
புவனகிரி 77, கீழச்செருவாய் 43, பரங்கிப்பேட்டை 40.2, ஸ்ரீமுஷ்ணம் 37.1, சேத்தியாத்தோப்பு 36.8, லால்பேட்டை 33, சிதம்பரம் 30.2, தொழுதூா், லக்கூா் தலா 27, அண்ணாமலை நகா் 25.2, மாவட்ட ஆட்சியரகம் 22.4, கொத்தவாச்சேரி 22, பெலாந்துறை 18.6, குப்பநத்தம் 18.4, குறிஞ்சிப்பாடி 17, வானமாதேவி 16, காட்டுமன்னாா்கோவில் 14.3, பண்ருட்டி, விருத்தாசலம் தலா 10, கடலூா் 9.3, வடக்குத்து, மேமாத்தூா் தலா 8, வேப்பூா் 7, காட்டுமயிலூா் 5 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது. எனினும், செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.