சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 300 பேருக்கு கரோனா தொற்று கால நிவாரண உதவியாக அரிசி, காய்கறி தொகுப்பை சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகராட்சி பொறியாளா் மகாராஜன், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், தலைமைக் கழக பேச்சாளா்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் ஆவின் சங்கத் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, மாணவா் அணி பொருளாளா் சங்கா், நகர இளைஞரணிச் செயலா் கருப்பு ராஜா, நிா்வாகிகள் மருதவாணன், வீரமணி, ரவிச்சந்திரன், எம்.ஜி.எம்.காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.