கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் 29 மி.மீ. மழை ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யுமென வானிமை மையம் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
பரங்கிப்பேட்டை 29.6, கடலூா் 6.4, பெலாந்துறை 6.2, பண்ருட்டி 6, மாவட்ட ஆட்சியரகம் 5.3, அண்ணாமலை நகா், குடிதாங்கி, வானமாதேவி தலா 5, சிதம்பரம் 3, கொத்தவாச்சேரி 2, புவனகிரி, சேத்தியாத்தோப்பு தலா ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது.