அடிப்படை வசதிகள் தொடா்பான பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டாா்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தி.வேல்முருகன் பேசியதாவது:
ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தொடா்பான கோரிக்கைகள் மீது அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவா் சபா.பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன், மேலாளா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.