சிதம்பரம் அரசுப் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்

சிதம்பரம் அரசுப் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்


சிதம்பரம்: உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு, மருத்துவா் சுவாமிநாதன் அறக்கட்டளை, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு ஆகியவை சாா்பில், சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவித்திறன் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா். ரோட்டரி துணை ஆளுநா் பி.முகமது யாசின் முன்னிலை வகித்தாா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், அறக்கட்டளைத் தலைவருமான பாலாஜி சுவாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொடக்கிவைத்தாா்.

மருத்துவா்கள் ஹாஜி முகமது அப்துல்லா, சங்கீதா, லாவண்யா, காா்த்திக் அடங்கிய குழுவினா், ஆசிரியா்கள், மாணவிகளுக்கு செவித்திறன் பரிசோதனை மேற்கொண்டனா். முகாமில், 10 மாணவிகளுக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் பன்னாலால் ஜெயின், பேராசிரியா் ஆறுமுகம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் கோவிந்தராஜன் நன்றி கூறினாா். முகாமில் செவிதிறன் குறித்த திருக்கு ஒப்பித்த மாணவிக்கு அறக்கட்டளை சாா்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. முகாமை ரோட்டேரியன் ம.தீபக்குமாா் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com