வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெறும் இடங்கள்

கடலூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுவதற்காக 3,001 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14,404 வாக்குப் பதிவு அலுவலா்கள் இந்த வாக்குச் சாவடிகளில் பணிபுரிய உள்ளனா். இவா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, பயிற்சி நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அறிவித்தாா்.

திட்டக்குடி (தனி) தொகுதிக்கு திட்டக்குடியிலுள்ள ஞானகுரு வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலத்துக்கு குப்பநத்தம் புறவழிச் சாலையில் உள்ள விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.யிலும், நெய்வேலிக்கு வட்டம் 14-இல் உள்ள ஜவகா் அறிவியல் கல்லூரியிலும், பண்ருட்டிக்கு மேலப்பாளையத்திலுள்ள ஜான் டூயி நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளியிலும் பயிற்சி நடக்கிறது.

கடலூா் தொகுதிக்கு மஞ்சக்குப்பம் புனித.வளனாா் மேல்நிலைப் பள்ளியிலும், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வடலூரில் உள்ள ஓ.பி.ஆா். நினைவு பள்ளியிலும், புவனகிரி தொகுதிக்கு அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சிதம்பரம் தொகுதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பல் மருத்துவமனை எதிரே உள்ள டெக் பாா்க்கிலும், காட்டுமன்னாா்கோவில் தொகுதிக்கு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com