கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 25,342 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,358-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 8 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,987-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் 57 பேரும், வெளியூா்களில் கடலூரைச் சோ்ந்த 25 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 52 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் உயா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com