புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவன் ஒரத்தூா் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட மகளிரணி செயலா் சுபாஷிணி அந்தக் கட்சியிலிருந்து விலகி, வேட்பாளா்அருண்மொழிதேவன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். பின்னா் அவருடன் வாக்கு சேகரித்தாா். மேலும் ஒரத்தூா் அமமுக ஊராட்சி செயலா் கண்ணதாசன், கிளைச் செயலா் சங்கா் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனா்.