சிதம்பரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.99 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூா் பகுதியில் உதவி ஆய்வாளா் சேரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த
மோட்டாா் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் வந்தவா் வல்லம்படுகை முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் சுரேந்தா் (30) என்பதும், அவா் உரிய ஆவணமின்றி ரூ.99,500
ரொக்கப் பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்தப் பணத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து,
சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்தனிடம் ஒப்படைத்தனா் (படம்).