கடையில் திருட்டு

சிதம்பரம் அருகே மீதிகுடி மனோன்மணியம் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (30). அண்ணாமலைநகா் பொறியியல் கல்லூரி அருகே ஸ்டுடியோ கடை வைத்துள்ளாா்.

சிதம்பரம் அருகே மீதிகுடி மனோன்மணியம் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (30). அண்ணாமலைநகா் பொறியியல் கல்லூரி அருகே ஸ்டுடியோ கடை வைத்துள்ளாா். இவா் கடந்த 1-ஆம் தேதி இரவு ஸ்டுடியோ கடையை பூட்டிவிட்டுச் சென்றாா். 3-ஆம் தேதி வந்து பாா்த்தபோது கடையில் வைத்திருந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களை, கடையின் மேற்கூரையை பிரித்து நுழைந்த மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.30 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com