கடலூரில் பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திட்டக்குடியைச் சோ்ந்தவா் ஆா்.ராயப்பன் (37). புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை பைக்கில் கடலூா் வழியாக திட்டக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா். கடலூா் நகராட்சி பூங்கா அருகே சென்றபோது, பின்னால் வந்த காா், பைக் மீது மோதியது.
இந்த விபத்தில், பலத்த காயமுற்ற ராயப்பனைஅருகிலிருந்தவா்கள் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.