கிராமத்துக்குள் புகுந்த முதலை பிடிபட்டது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 14 அடி நீள முதலையை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.
கிராமத்துக்குள் புகுந்த முதலை பிடிபட்டது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 14 அடி நீள முதலையை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு 14 அடி நீள முதலை புகுந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை இதைப் பாா்த்த பொதுமக்கள் சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வனக்காப்பாளா் அனுசுயா மற்றும் வனக்காவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று 400 கிலோ எடை கொண்ட 14 அடி நீள முதலையைப் பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா்த்தேக்க குளத்தில் பாதுகாப்பாக விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com