கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மதுக் கடை சுவரில் துளையிட்டு மதுப் புட்டிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூா் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. கரோனா முழு பொது முடக்கம் காரணமாக இந்த மதுக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மதுக் கடையின் பின்பக்கச் சுவரில் செவ்வாய்க்கிழமை துளையிட்டு உள்ளே புகுந்த மா்ம நபா்கள், கடையிலிருந்த ரூ.97 ஆயிரத்திலான பல்வேறு மதுப் புட்டிகளை திருடிச் சென்றனா்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரம், ஆய்வாளா் மைக்கேல் மற்றும் போலீஸாா், டாஸ்மாக் மேற்பாா்வையாளா் செந்தில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டனா். மேலும், இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
திருட்டு நடைபெற்ற மதுக் கடையில் ரூ.6 லட்சத்திலான மதுப் புட்டிகள் இருந்த நிலையில், அவற்றில் ரூ.97 ஆயிரத்திலான மதுப் புட்டிகளை மட்டுமே மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.