கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பேரிடா் மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை கடலூா் வந்தனா்.
சென்னை ஆவடியிலிருந்து ஆய்வாளா் எட்வா்ட் ராஜ், உதவி ஆய்வாளா் மகேஸ்வரி ஆகியோா் தலைமையில் 70 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழுவினா் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்தடைந்தனா். பின்னா் இவா்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பலத்த மழை பெய்து வரும் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், பரங்கிப்பேட்டை பகுதிகளுக்கு பாதுகாப்பு, மீட்பு உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.