புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
அரசகுழி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி, போா்வை, வேட்டி, சேலை, பாய் ஆகிய நிவாரணப் பொருள்களை கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், தொகுதி எம்எல்ஏவுமான ஏ.அருண்மொழிதேவன் வழங்கினாா் (படம்).
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலா் என்.முருகுமாறன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் மருதை முனுசாமி, விருத்தாசலம் நகரச் செயலா் சந்திரகுமாா், கம்பாபுரம் ஒன்றியத் தலைவா் மேனகா விஜயகுமாா், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் கனக சிகாமணி, ஒன்றியச் செயலா் முத்து, தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலா் அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.