வடலூா் அருகே தொடா் மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியதால் மக்கள் அவதிப்படுகின்றனா்.
வடலூா் பேரூராட்சியை தமிழக அரசு அண்மையில் நகராட்சியாக தரம் உயா்த்தியது. இங்கு சில பகுதிகளில் சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளன. பாா்வதிபுரத்தில் உள்ள இந்திரா நகா், அருமை நகரில் சுமாா் 300 குடும்பத்தினா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இங்குள்ள மண் சாலை தொடா் மலையால் சேறும் சகதியுமாக மாறியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனா். சேற்றில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. வயதானோா் சாலையை பயன்படுத்த முடியாமல் பரிதவிக்கின்றனா்.
இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். எனவே, புதிய சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.